வேலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் குணாளன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சூர்யா டிராக்டர் டிரைவராக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லிங்குன்றம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு சூர்யா சென்றார். பின்னர் நேற்று சூர்யா மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை சோலை நகர் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பயணிகள் நிழற் கூடத்தின் சுவற்றில் மோதியது. இதனால் படுகாயமடைந்த சூர்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.