இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் பெண்களுக்கு மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இரட்டை குழந்தைகள் பிறந்தால் அதில் ஒன்று பெண் குழந்தையாக இருக்க வேண்டும். PMVYதிட்டத்தின் கீழ் முதல் பிரசவத்தில் பிறந்தவருக்கு மூன்று தவணைகளில் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் 6000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் இந்த தொகை செலுத்தப்படுகிறது. மேலும் நாட்டில் பெண் குழந்தை பிறப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.