தமிழக அரசானது பெண்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது பெண்களுக்கான நடமாடும் ஒப்பனை அறையை சென்னை மாநகராட்சி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. சோதனை முயற்சியாக சென்னையில் சில இடங்களில் இந்த வாகனம் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த நடமாடும் ஒப்பனை அறை வாகனத்தில் கழிவறை, முகம் பார்க்கும் கண்ணாடி, சானிட்டரி நாப்கின், கை கழுவும் திரவம், உடை மாற்றும் அறை மற்றும் தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளிட்ட பெண்களின் அத்யாவசிய பொருட்கள் இடம்பெற்றுள்ளன. விரைவில் இந்த வாகனம் சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் பிற மாநிலங்களிலும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.