வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்ப அட்டைகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் பயன்பெறும் விதமாக புதிய குடும்ப அட்டை பெரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு அரசின் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் மனுதாரர் உரிய படிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் மேற்கண்ட மனுவை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களின் மூலம்   மனுக்களின் மீதான விசாரணை சித்து நிரந்தரமாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளவர்களுக்கு  புதிய குடும்ப அட்டை பெற்றவுடன் தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே குடும்பத்தை திட்டத்தின் மூலமாக ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற்று பயன்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.