யுபிஐ செயலிகளை பயன்படுத்துபவர்களுக்கு தற்போது முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது phonepe, google pay ,போன்ற அனைத்து வங்கி மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளும் கடந்த ஒரு வருடத்தின் செயல்படாத யுபிஐ ஐடிகளுடன் வேலை செய்வதை நிறுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தாவது கடந்த ஒரு வருடத்தில் எந்த பரிவர்த்தனையும் செய்யாத அனைத்து ஐடிகளையும் பிளாக் செய்யுமாறு அனைத்து வங்கிகள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கும் இந்திய தேசியக்கொடுப்பனவு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு டிசம்பர் 31 வரை காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே நீண்ட காலமாக நீங்கள் யூபிஐ மூலமாக எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் உடனடியாக அந்த வேலையை முடிக்க வேண்டும். இல்லை என்றா  யுபிஐ ஐடி மூடப்படும் என்ற புதிய விதிமுறை இந்த வருடம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அது மட்டுமில்லாமல் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்த முன்னதாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே வரம்பு இருந்தது. ஆனால் தற்போது அது ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.