மாசிமகம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகின்ற மார்ச் 7ஆம் தேதி மாசி மகம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேல்நிலைப் பள்ளிகளுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.