இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர் . ஆனால் சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றது . இந்நிலையில் இந்திய ஆயில் நிறுவனம் புதிய வகை சமையல் கேஸ் சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது. இன்டேன் எக்ஸ்ட்ராடெஜ் சிலிண்டரில் முந்தைய சிலிண்டரை விட குறைந்தபட்சம் ஐந்து சதவீதம் எரிபொருளை மிச்சப்படுத்த முடியும் என்றும் சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டர் மற்றும் குழாய் ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளதாக வும் உள்ளது. மேலும் இந்த புதிய வகை சிலிண்டர் சமையல் நேரத்தை மிச்சப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.