மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள். அந்தவகையில் பெண்களுக்கான பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார். ‘லாட்லி பெஹ்னா’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.1,000ல் இருந்து ரூ.1,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அரசு வேலைகளில் 35 சதவீத இடஒதுக்கீடு மற்றும் ரூ.450க்கு சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். மத்திய பிரதேச சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.