தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை பி.எம் கிசான் பயனாளிகளுக்கு 13-வது தவணை தொகை விடுவிப்புக்கு வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என கூறியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் இணைந்த பயனாளிகளுக்கு இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான காலத்திற்கு 13 -வது தவணைத் தொகையை ஜனவரி மாத இறுதியில் விடுவிப்பதற்காக மத்திய அரசு ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பி.எம் கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து  வங்கி கணக்கு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகளுக்கு மட்டுமே இந்தத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக கூறியுள்ளது. தமிழ் தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பயனாளிகளில் 8,84,120 பயனாளிகள் இதுவரை தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தனர். அதனால் ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகளும் தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வேளாண் வேளாண்மை உழவர் நலத்துறையானது, அஞ்சல் துறை மற்றும் பொது சேவை மையத்துடன் இணைந்து கிராமம் வாரியாக சிறப்பு முகாம்களை நடத்தி ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஆதார் எண்ணை உறுதி செய்வது அவசியம் பற்றி அறிவுறுத்தப்பட்டது.

மேலும் நாளிதழ்களில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கையின் விளைவாக இதுவரை 5,27,934 தகுதியான பயனாளிகள் ஆதார் எண் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,56,186 தகுதியான பயனாளிகளுக்கும் ஆதார் எண்ணை உறுதி செய்திடும் பணி வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள பி.எம் கிசான் திட்டத்தில் தமிழ்நாட்டு விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் பயன்பெற வேண்டும் என்பதற்காக வேளாண்மை உழவர் நலத்துறை எடுத்து வரும் இந்த முயற்சிக்கு இந்த திட்டத்தின் பயனாளிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு கேட்டுக்கொள்கின்றது என அதில் கூறப்பட்டுள்ளது.