சென்னையில் பிளஸ் டூ படிக்கும் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேரை சேர்ந்த தியாகு- ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சுவாதி. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் ஒரு தனியார் பள்ளி விடுதியில் சுவாதி பிளஸ் டூ படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுதியில் இருந்த சக மாணவிகள் வகுப்புக்கு சென்று விட்ட நிலையில் சுவாதி மட்டும் அறையில் தனியாக இருந்தபோது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.