கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் மல்லமுத்தங்களை ஆதிவாசி கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சந்தோஷ்குமார் மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சந்தோஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.