கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சோமு என்பவரது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சோமுவை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் கரூர் வாங்கல் பகுதிகளில் இருக்கும் கடைகளில் புகையிலை விற்பனை செய்த குற்றத்திற்காக தங்கராஜ், சுப்பிரமணி, பழனியப்பன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.