நேற்று அண்ணாமலை ரபேல் வாட்சின் விலையை வெளியிட்டார். அந்த பில்லில் வாட்ச் இன் விலை ஜிஎஸ்டி யோடு சேர்த்து 3,46,530 என்று பதிவாகி இருந்தது. ஆனால் அண்ணாமலை என்னுடைய வாட்சின் உண்மையான ஓனர் கோவை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் தான். அவரை எனக்கு இரண்டு வருடங்களாக தெரியும். இந்த வாட்சை அவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளேன்.

மேலும் என்னுடைய வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் கொடுக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கேள்விகளும் எழும்பியுள்ளன. இதனையடுத்து திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஆதாரமற்றது என சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று திமுக கூறிய நிலையில், அதையும் சமாளிக்க தயார் என்றுள்ளார் வானதி ஸ்ரீனிவாசன். ஊழல் பட்டியலுடன் ரஃபேல் வாட்ச் பில்லையும் அண்ணாமலை வெளியிட்டார். இதுகுறித்து விமர்சனங்கள் எழும் நிலையில், பில்லை தானே கேட்டீர்கள். சீரியல் நம்பரையா கேட்டீர்கள். அண்ணாமலை தமிழக அரசியலில் புது விவாதத்தை வைத்துள்ளார் என்றும் கூறினார்.