பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். இந்நிலையில்  கோடையில் மின் தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், அடுத்த மூன்று மாசத்துக்கு தேவையான மின்சாரத்துக்கு டெண்டர் கோரப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட் ட்டுள்ளன என கூறியுள்ளார். தமிழ்நாட்டின் தற்போதைய மின்தேவை 16.500 – 17,500 மெகாவாட் வரை உள்ளது. வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.