உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள சொகுசு குடியிருப்புக்கு அருகே உள்ள குப்பை கிடங்கில் பிறந்த குழந்தையின் உடல் கண்டறியப்பட்டது. நேற்று மதியம் 2.30 மணி அளவில் செக்டார் 104 இல் உள்ள ஏ டி எஸ் ஒன் ஹேம் லேட்டில் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வந்த பிறகு இது தொடர்பாக தெளிவுபடுத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பை தொட்டியில் குழந்தை பிணமாக கிடப்பது குறித்து துப்புரவு பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் புதிதாக குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்தும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் பிரிவாக விசாரித்து வருவதாகவும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்