பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16-ம் தேதி வெளியான படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல இயக்குனர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆதிபுருஷ் படம் வெளியான 3 தினங்களுக்கு பிறகு வசூலில் அடிவாங்க தொடங்கியது.

அந்த வகையில் இப்படம் வெளியாகி 6 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இதுவரை எதிர்பார்த்த வசூல் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் வர வாய்ப்பு உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. ஆகவே என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.