அமெரிக்காவில் உள்ள லேக்லேண்ட் நகரில் அயோவா அவென்யூ எனும் இடத்தில் நேற்று முன்தினம் சாலை ஓரமாக மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  காரில் வந்த  நான்கு பேர் ஒரே நேரத்தில் கார் ஜன்னல் கண்ணாடிகளை இறக்கிவிட்டு காருக்குள் இருந்தபடியே சாலை ஓரமாக நடந்து சென்றவர்கள் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளனர்.

அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு சென்ற அந்த கார் அருகே உள்ள பிளம் ஸ்ட்ரீட் எனும் இடத்திற்கு சென்று அங்கும் சாலையில் நடந்து சென்றவர்களை  துப்பாக்கியால் சுட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். இந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 10 ஆண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில்  இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.