ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த நாட்டில் வசித்து வரும் பெண்களுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் 20 வயது நெருங்கிய ஆஸ்தியாஜ் ஹகீகி மற்றும் அவரது வருங்கால மனைவியான ஆமீர் முகமது அகமது ஆகிய இளம் ஜோடியினர் பிரசித்தி பெற்ற அடையாளங்களில் ஒன்றான ஆசாதி கோபுரம் முன்பு கட்டிப்பிடித்தபடி நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தனர்.

இந்நிலையில் இஸ்லாமிய சட்ட விதிகளை மீறியதற்காக கடந்த நவம்பர் மாதம் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் கடந்த ஆண்டு தீவிரமடைந்த நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வீடியோ அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவர்கள் மீது தெஹ்ரானில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலா  பத்து ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்கள் வலைதளம் பயன்படுத்துவதற்கும் ஈரானை விட்டு வெளியேற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.