பாஜக கட்சியைச் சேர்ந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பூ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழின பெருமைகளை காப்பதற்கு காங்கிரஸ் கட்சியுடன் உறவை முறித்துக் கொள்வாரா என பிரதமர் விட்ட சவாலுக்கு பதில் சொல்ல முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பிறகு ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்பார் என்று கூறுபவர்களால் தமிழகத்தில் ஏன் தனித்து நின்று போட்டியிட முடியவில்லை.

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் நிற்காமல் ஏன் ரேபேலி தொகுதியில் நிற்கிறார். தமிழகத்தில் 3 வருட திமுக ஆட்சியில் கொண்டாட எதுவுமே இல்லை. அவர்கள் தங்களுக்கு தாங்களே கொண்டாடிக் கொள்கிறார்கள். ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். மேலும் நாங்கள் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.