தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி தொடங்கிய போது தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் இசைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் நாள் அலுவல்கள் தொடங்கிய போது தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறி தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தனது உரையை படிக்காமல் புறக்கணித்தார்.

இந்த நிலையில் இன்று அவரும் நிகழ்ச்சி மேடையில் இருந்திருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் அலுவல்கள் தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும் அலுவல்கள் நிறைவடையும்போது தேசிய கீதமும் பாடுவது மரபாக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.