விளங்கோடு சட்டப்பேரவை தொகுதி பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து காலியானதாக அறிவிக்கப்பட்டது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது .காங்கிரஸிலிருந்து விஜயதாரணி பாஜகவில் இணைந்ததால் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விளவங்கோடு தொகுதிக்கு விரைவில் இடைதேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.