இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட 75 கலங்கரை விளக்கங்களைத் திறந்து வைத்து, வாஞ்சி மணியாச்சி – நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மேலும், ரூ.4586 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டிற்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். இதன்பின்னர் பேசிய பிரதமர், இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இந்த திட்டங்களால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்என்று கூறியுள்ளார்.