நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சற்றுமுன் தாக்கல்  செய்தார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பிரகாசமான எதிர்காலம் தெரிகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு 78000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வீடுகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனக் கூறிய அவர், 3 ஆண்டுகளில் பழங்குடியினர் நலனுக்கான ஒதுக்கீடு 15000 கோடி செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.