ஈரோடு மாவட்டம் கல்வாரி பகுதியை சேர்ந்தவர்கள் தனபால் – அன்னக்கொடி தம்பதி. கர்ப்பிணியான அன்னக்கொடிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் அன்னக்கொடி மற்றும் உறவினரை ஏற்றிக்கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது.

ஆனால் அன்னக்கொடிக்கு வலி அதிகமானதால் உடன் இருந்த அவசரகால மருத்துவ நுட்புணர் பூபதி நிலைமையை புரிந்து கொண்டு ஆம்புலன்ஸை ஓரமாக நிறுத்தக் கூறி பிரசவம் பார்த்தார். அப்போது அன்னக்கொடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் மீண்டும் சுகாதார நிலையத்திற்கு தாய் சேய் என இருவரையும் அழைத்துச் சென்றுள்ளனர். ஆம்புலன்ஸில் இருந்த அவசரக்கால மருத்துவருக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.