தமிழகத்தில் குரூப் 2 நேர்முகத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2 பணியிடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையாகக் கொண்டவை. இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் மற்றும் கலந்தாய்வு வருகின்ற பிப்ரவரி 12 முதல் தொடங்குகிறது. அதே சமயம் கலந்தாய்வு பிப்ரவரி 21ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குரூப் 2 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் மொத்தம் 6151 காலி பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.