புறம்போக்கு என்ற வார்த்தையின் வலி தனக்கு நன்றாக தெரியும் என்று அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்துள்ளார். புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பட்டா இல்லாத இடத்தில் வசிப்பவர்களின் நிலத்தை குறிப்பிட புறம்போக்கு என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள்.

அதனை பலமுறை நான் கேட்டிருக்கிறேன். அதன் வலியை என்னால் உணர முடியும் என்று அமைச்சர் கண்ணீருடன் தெரிவித்தார். மேலும் தேர்தல் நேரத்திற்கு பிறகு கரையை பார்த்து வேலை செய்யும் ஆள் நான் இல்லை அப்படி எனது தாத்தா கலைஞர் என்னை வளர்க்கவில்லை என்று தெரிவித்தார்.