தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 150கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதால் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் சாணக்கியா பள்ளியில் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். இதில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பமும் தகுதியும் உள்ள இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.