பொதுவாக நம்மில் பலர் காலையில் காபி அல்லது டீ குடிக்காமல் இருப்பதில்லை. ஆனால் எல்லா சமயத்திலும் காபி அல்லது டீ குடிப்பது சரியா? குறிப்பாக காபி குடித்துவிட்டு மாத்திரை போடலாமா? குளிர்ந்த நீருடன் மாத்திரை போடலாமா என்ற பல கேள்விகள் இருக்கிறது. இது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள். தலைவலி, மாத்திரை சாப்பிடும் போது சிலர் காபியில் கலந்து குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.

ஆனால் இதை தவறான முறை இதில் உள்ள கேபைன், மாத்திரையின் சக்தியை குறைக்கக்கூடியது. எனவே இந்த பழக்கத்தை தவிர்க்க வேண்டும். அதுபோல கேபைன் நரம்பு மண்டலத்தை தூண்டக்கூடியது. மயக்கம் அல்லது உடலை சாந்தப்படுத்தும் மருந்துகளை காபியோடு போடும்போது தீங்கு விளைவிக்க கூடும்.

ஏனென்றால் இரண்டும் எதிர் விளைவுகளை கொண்டுள்ளது. குளிர்ந்த நீரோடு மாத்திரை போடும்போது அந்த மாத்திரை சீக்கிரமாக செயல்படாது. அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். உணவு சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிப்பதால் உணவில் உள்ள கொழுப்புகள் கரைவதற்கு சிக்கல் ஏற்பட்டு அது அப்படியே தேங்கி விடும். அது போல ஐஸ்வாட்டரில் மாத்திரை சாப்பிடும் போது மாத்திரையின் வேலை தாமதமாகும்.

எனவே குளிர்ந்த நீரில் மாத்திரை போடக்கூடாது. வாய் நிறைய தண்ணீர் ஊற்றி அதில் மாத்திரை போடுவது தான் சரியான முறை. 250 மில்லி தண்ணீரோடு மாத்திரை போட்டால் உணவு குழாயில் தடையின்றி நேராக செல்லும். டீ, காபி போல பாலுடனும் மாத்திரை போட்டுக் கொள்வதும் தவறுதான். அப்படி செய்வதால் பாலில் இருக்கும் புரதம், கால்சியம் மாத்திரைகளில் இருக்கும் வீரியத்தை குறைத்து அதன் வேலையை செய்ய விடாமல் தடுக்கும்.