உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த யூடியூப் வலைப்பதிவர் ஒருவர், சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு பைக் ஷோரூமுக்குச் சென்று, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேடிஎம் டியூக் பைக்கை வாங்குவதற்காகப் பிச்சைக்காரர் போல உடையணிந்து சென்றார். இதைப் பார்த்து ஏமாந்த ஷோரூம் ஊழியர்கள், அவரை ஒரு உண்மையான பிச்சைக்காரர் என்று நினைத்து அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
இந்த அவமானத்தால் மனம் தளராத அந்த யூடியூபர், அடுத்த நாளே அதே ஷோரூமுக்கு ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் மீண்டும் சென்றார். ஷோரூம் மேலாளர் முன்பு பணப் பையை அப்படியே கொட்டிய அவர், அதில் கும்மிருட்டாக மின்னிய ஐநூறு ரூபாய் நோட்டுகளைக் காட்டி அனைவரையும் அதிர வைத்தார். இதைப் பார்த்தவுடன் நிலைமை அப்படியே மாறியதுடன், உடனடியாக ஓடிவந்த மேலாளர் “சார், உங்களுக்குத் தேநீர் அல்லது சிற்றுண்டி வேண்டுமா? எந்தக் குளிர்பானத்தைக் கொண்டு வரட்டும்? எந்த கேடிஎம் மாடல் பைக்கை வாங்கப் போகிறீர்கள்?” என்று மிகுந்த மரியாதையுடன் உபசரிக்கத் தொடங்கினார்.
Up गाजियाबाद का रहने वाला ये लड़का एक छोटा मोटा blogger है, जिसके YouTube पर 300K सब्सक्राइबर है।
2 दिन पहले भिखारी बनकर KTM Duke बाइक ₹200000 रुपए की खरीदने के लिए शोरूम गया, शोरूम वालों ने भिखारी समझ कर भगा दिया।
दूसरे दिन वही blogger भिखारी ₹500000 रुपए लेकर सीधा उसी… pic.twitter.com/GrSpLW0Q12
— BHUMI (@Bhumika_2024) August 28, 2026
“>
இதற்குப் பதிலளித்த அந்த வலைப்பதிவர், “பவர் என்பது மனிதர்களிடம் அல்ல, பணத்திடம்தான் இருக்கிறது” என்று அழுத்தமாகத் தெரிவித்தார். பிச்சைக்காரர் போல வந்தவரை அவமானப்படுத்திய அதே ஷோரூம் ஊழியர்கள், பணம் கையில் இருந்தவுடன் அவரைச் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது செம வைரலாகி வருகிறது.
