முதல்வர் முக ஸ்டாலின், விரைவில் தமிழ்நாட்டை போலவே நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவுக்கே விடியல் வரும். இன்றைக்கு மத்தியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நடக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு- எப்படி 2021-ல் தமிழ்நாட்டிற்கு ஒரு விடியலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்களோ அதே போல, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவிற்கே விடியலை ஏற்படுத்தித்தரக்கூடிய ஒருநிலை வரப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருங்கள்  என்றார்.

இந்நிலையில் 2024ல் தேசிய அளவில் விடியல் ஆட்சி அமையும் என முதல்வர் ஸ்டாலின் கூறியதற்கு,பாவம் எவ்வளவு பேர் அடி வாங்கப் போறாங்கன்னு தெரியலையே என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். திமுக அமைச்சர்கள் கட்சிக்காரர்களையும், மக்களையும் பொது இடத்தில் வைத்து அடிக்கிறார்கள். இந்த அடிக்கெல்லாம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றார்.