மதுரை மற்றும் திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் திருமங்கலம் இடையே காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை மோட்டார் மற்றும் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெறும் போது மக்கள் இரயில் பாதை அருகே வசிப்போர் புதிய ரயில் பாதையை நெருங்கவோ கடக்கவும் முயற்சிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.