ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், மனைவி பொதுமக்களுக்கு முன்பாக கணவரை மிகவும் தரக்குறைவாகப் பேசி அவமானப்படுத்துகிறார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த அந்த கணவர், தாள முடியாத விரக்தியில் அங்கிருந்த அனைவர் முன்னிலையிலும் தனது செருப்பை கழற்றித் தன்னைத்தானே அடித்துக்கொண்டு தண்டனை அளிக்கும் நெஞ்சை உலுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

​எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளியைக் கண்ட நெட்டிசன்கள், அந்தப் பெண்ணின் செயலுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொது இடத்தில் ஒரு மனிதனின் சுயகௌரவத்தைப் பாதிக்கும் வகையில் நடப்பது கண்டிக்கத்தக்கது என்றும், அந்த கணவருக்கு ஆதரவாகவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.