சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் தற்போது ஒரு அதிரடியான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஆக்ரோஷமாக சீறி வரும் ஒரு ராட்சத ராஜநாகத்தை, எந்த ஒரு பயமுமின்றி ஒரு இளைஞர் மிக லாவகமாக எதிர்கொள்கிறார். கையில் எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், வெறும் ஒரு பிவிசி பைப் மற்றும் ஒரு சாதாரணப் பையை மட்டுமே வைத்துக்கொண்டு அவர் அந்தப் பாம்பை லாவகமாகக் கையாளுவது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

​அந்த இளைஞர் பாம்பின் கவனத்தைத் திசைதிருப்பி, ஒரு நொடி கூட தாமதிக்காமல் அதைச் சரியாகப் பைக்குள் ஏற்றிப் பிடிக்கிறார். ஒரு சிறிய தவறு நடந்தால் கூட உயிருக்கே ஆபத்தாய் முடியக்கூடிய இந்தச் சூழலில், அவர் காட்டிய துணிச்சலும் வேகமும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், அந்த இளைஞரின் தைரியத்தைப் பாராட்டி அவரை ஒரு ‘ரியல் ஹீரோ’ எனப் புகழ்ந்து வருகின்றனர்.