கர்நாடகாவில் கர்நாடக மாநில பேருந்துகளில் பெண் நடத்துநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கே.எம். தொட்டியில் இருந்து மாண்டியாவுக்கு அரசு பேருந்தில் மாயா ஸ்ரீ என்ற பள்ளி மாணவி பயணம் செய்துள்ளார். அப்போது பணியில் இருந்த பெண் நடத்துனராக இருந்த சௌபாக்யா என்பவரிடம் பணத்தை குடுத்து பாட்டி டிக்கெட் குடுங்க என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சௌபாக்யா மாணவியை பார்த்து நான் என்ன பாட்டி மாதிரியா இருக்கேன் என கூறி அவரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அறிந்த மாணவியின் பெற்றோர் நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.