பாஜக ஆட்சிக்கு வந்தால் பீகாரில் கலவரக்காரர்களை தூக்கிவிட்டு தக்க பாடம் புகட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நவாடா மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த மூன்று நாட்களில் பீகார் ஷெரி மற்றும் நாலந்தா மாவட்ட தலைமையகமான சஜாராவில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல்கள் பதிவாகியுள்ளன. இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 30ஆம் தேதி ராம நவம்பை ஊர்வலத்தின் போது மோதல் தொடங்கிய நிலையில் அமித்ஷா இவ்வாறு கூறியுள்ளார்.