தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுக தான் என்ற இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், தேர்தலுக்குப் பிறகு அதிமுக தமிழ்நாட்டில் இருக்காது என்று பாஜக கூறுகிறது. 1998 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை தமிழகத்தில் அடையாளம் காட்டியதே அதிமுக தான். எங்கள் இயக்கத்தை தொட எந்த கொம்பனாலும் முடியாது என தெரிவித்தார். அதிமுக தேர்தலுக்குப் பிறகு இருக்காது என மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.