நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, அப்பா மறைந்த 100 நாள் கூட ஆகவில்லை. நிறைய துக்கங்கள் துயரங்கள் என்னோடு இருந்தாலும் சிரித்தபடி வாக்கு சேகரித்து வருகிறேன் என விஜய பிரபாகரன் சோகமாக பேசியது வாக்காளர்களை கலங்கடித்தது.

மேலும் நான் சென்னைக்கு போக விரும்பவில்லை, அப்பாவுக்கு புரோட்டா ரொம்ப பிடிக்கும், ஒருவேளை சோறு போட மாட்டீங்களா? என்றார். அப்போது கண்டிப்பாக போடுவோம் என்று மக்கள் கூச்சலிட்டனர்.