முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாயை திறந்தால் பலர் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூசகமாக தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பேசிய டிடிவி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப் போல எங்களுக்கு கிடைத்துள்ள குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டுவோம்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் பலர் சிறைக்குச் செல்ல நேரிடும். ஏற்றுள்ள வேடத்திற்கு ஏற்ப டோக்கன் என்றெல்லாம் என்னை பற்றி தங்க தமிழ்ச்செல்வன் பேசுகிறார். யார் விசுவாசிகள் யார் துரோகிகள் என்று மக்களுக்கு நன்றாக தெரியும் என கூறினார்.