சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி செய்த முறைகேடு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 2024 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக, பிஜேபியின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் சட்டப்பிரிவு 142ன் கீழ் அரிதான அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீதிமன்றம் நியாயத்தை நிலைநிறுத்தியது மட்டுமல்லாமல், தலைமை அதிகாரியால் பொறிக்கப்பட்ட தேர்தல் முறைகேட்டையும் தீர்க்கமாக ஒதுக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.