தேர்தல் பத்திர முறைகேடு பூதாகரமாக மாறியுள்ள நிலையில் அதுகுறித்து குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை முடியும் வரை பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் என்றும் அக்கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பல ஆயிரம் கோடியை பாஜக திரட்டியுள்ளது என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது .