ஐதராபாத்தில் உள்ள நானக்ராம்குடாவில் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நீதுபாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். சிறு மளிகைக் கடை நடத்தி வந்த அவரது வங்கிக் கணக்குகளில் ரூ.1.63 கோடி ரொக்கம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் ஹைதராபாத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.2 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களையும் வைத்திருந்ததை ஐதராபாத் நகர காவல் துறையினர் கண்டறிந்தனர். அவரது மொத்த சொத்து சுமார் ரூ. 4 கோடி வரை இருக்கும் என கூறினர்.