பாகிஸ்தானுக்கு அகதிகளாக ஆப்கானை சேர்ந்த பலர் சென்றுள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் எந்த விதமான பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டதற்கான அறிகுறிகள் இல்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, “ஆப்கான் அகதிகளுக்கு பாகிஸ்தான் செய்த உதவிக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான சம்பவங்களில் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்” என கூறியுள்ளார்