வியட்நாம் தோட்டத்தில் ஒரு பெரிய தோட்டம் உள்ளது. ஆனால் இந்த தோட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைப்பதில்லை. அதற்கு மாறாக மரங்களில் ஏராளமான பாம்புகள் மரக்கிளைகளில் தொங்கியபடி உள்ளன. இந்த தோட்டத்தில் பாம்புகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதாவது வியட்நாமின் trai ran Dong Tam என்ற பண்ணை தோட்டத்தில் பாம்புகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தப் பண்ணையில் மருத்துவ பொருள்களும் தயாரிக்கப்படுகிறது.

இங்கு 400க்கும் மேற்பட்ட விஷ பாம்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள பாம்புகளின் விஷத்திலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த தோட்டத்திற்கு ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுமார் 12 ஹேக்ட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில் ஏராளமான வசதிகள் உள்ளது. ஒவ்வொரு வருடமும் சுமார் 1500 பேர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற இந்த தோட்டத்திற்கு வந்து செல்கின்றனர். விஷ பாம்புகள் நிறைந்துள்ள இந்த தோட்டம் தற்போது சுற்றுலா தளமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.