பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தேர்தல் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருவேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டனர். தேர்தல் வேட்பாளர்களை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியாகினர் மேலும் 40-க்கும் மேற்பட்டவர் படுகாயம் அடைந்துள்ளனர். குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.