மருந்து கொள்முதல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கெஹலியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட கெஹலியா பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சரானார் இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மருந்து கொள் முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து இதற்கு மூளையாக செயல்பட்ட அமைச்சர் கெஹலியா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியில் இருந்து கெஹலியா ராஜினாமா செய்துள்ளார்.