தெலங்கானாவில் தனது வளர்ப்பு நாயை தெரு நாய்கள் கடித்துக் கொன்றதால், ஆத்திரத்தில் நண்பர்கள் உதவியுடன் நள்ளிரவில் பென்ஸ் காரில் வந்து துப்பாக்கியால் சுட்டு 20 தெரு நாய்களைக் கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி, தனது மாமியார் வீடு இருக்கும் கிராமத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள தெரு நாய்கள், இரு வளர்ப்பு நாய்களை கடித்ததில் ஒன்று உயிரிழக்க, மற்றொன்று படுகாயம் அடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த நரசிம்ம ரெட்டி தனது நண்பர்கள் உதவியுடன் 20 தெரு நாய்களை சுட்டுக்கொன்றுள்ளார்.