பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு இமெயில் வந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 50க்கும் மேற்பட்ட போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் தயிர் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மோப்பநாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. பழனியில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் நிலையில் இந்த திடீர் வெடிகுண்டு மிரட்டல் பழனி நகர் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.