மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. முதலில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளியை நெருங்கிவிட்டதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் கூறியுள்ளனர்.