நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பு என அடுத்தடுத்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் எட்டு தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அதில் திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகளுடன் சிவகங்கை காங்கிரசை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள இமகமுகவின் தேவநாதன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார். இது தவிர விளவங்கோடு இடைத் தேர்தலிலும் இரு தேசிய கட்சிகளும் நேரடியாக மல்லு கட்டுகின்றன.