தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து நேற்று வரை நடத்தப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு சோதனைகளில் 11. 95 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 10.28 கோடி ரொக்கம், 0.68 கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள், 0.35 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள், 0.22 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், ரூ.0.41 கோடி இலவச பரிசு பொருள்கள் அடங்கும்.